கோவையில் படுகொலை செய்யப்பட்ட பாரூக் நினைவாக உருவப்படம் திறப்பு

கோவையில் கடந்த மாதம் பாரூக் எனும் வாலிபர் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் நினைவாக திராவிட விடுதலைக் கழகம் சார்பில் உருவப் படம் திறப்பு விழா கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இதனை, திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், பாரூக்கின் கொலை குறித்தான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் சிறந்த புலனாய்வு செய்து கொலை செய்ய தூண்டியவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு திராவிட விடுதலைக் கழகமும் உறுதுணையாக இருக்கும். 



பெரியார் இயக்கம் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும். பெரியார் இயக்கமும், முஸ்லீம் சமுதாயமும் ஒரு நல்லிணக்கமாக இருந்த உறவை தற்போது மத தூய்மை வாதம் பேசுகிற வெறி அமைப்பினர் ஊட்டிய காரணத்தினால் பெரிய அச்சம் ஏற்படுகிறது.

இந்துத்துவ ஆட்சி நடக்கிற வேலையில் இந்த கொலை வழக்கு திசை திரும்பி விடுமோ என்ற எண்ணம் நிலவுகிறது. இருந்தும் இந்த கொலை வழக்கில் சம்பந்தம் உடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எவ்வித பாதிப்பும் இஸ்லாமியர்களுக்கும் பெரியார் திராவிட கழகத்திற்கும் ஏற்படாது என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...