கோவையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சி மூலம் ரூ.20.40 லட்சம் வருவாய்: செய்தி மக்கள் தொடர்புத் துறை தகவல்

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியை 1.44 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை வஉசி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கிய அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொருள்காட்சியில், அரசின் 34 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட விளக்க அரங்குகள், பொருள்கள் விற்பனை, விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பொருள்காட்சியைக் காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 என நுழைவுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பொருள்காட்சியை 1.44 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்திருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை ஜூலை 3-ஆம் தேதி தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...