உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு, ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல குறைபாடே என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கோவை ஹீமோஃபீலியா சொசைடியும் இணைந்து, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையும் தன்மை குறைபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, "பிறக்கும் 6 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா பாதிப்பு ஏற்படக் கூடும். உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்பது மூலம் ஹீமோஃபீலியாவை தவிர்க்க முடிவும். ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல, அது குறையாடே என்று தெரிவிக்கப்பட்டது
.
மேலும், இந்த நோய் குறைபாடு உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சைகான மருந்து 10,000 ரூபாய். அதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் ஹீமோஃபீலியா-வினால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 6 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த வகை பாத்கிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்த பேரணி இரயில் நிலையம் வழியாக சென்று கோவை அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கோவை ஹீமோஃபீலியா சொசைடியும் இணைந்து, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையும் தன்மை குறைபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, "பிறக்கும் 6 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா பாதிப்பு ஏற்படக் கூடும். உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்பது மூலம் ஹீமோஃபீலியாவை தவிர்க்க முடிவும். ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல, அது குறையாடே என்று தெரிவிக்கப்பட்டது
. மேலும், இந்த நோய் குறைபாடு உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சைகான மருந்து 10,000 ரூபாய். அதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் ஹீமோஃபீலியா-வினால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 6 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த வகை பாத்கிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்த பேரணி இரயில் நிலையம் வழியாக சென்று கோவை அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.