ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மாமியார் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்


கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த மோகன் என்பவரும் காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு ரித்திகா என்ற நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவரின் தாயார் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா மனு அளித்தார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

எனது கணவர் பெயர் மோகன். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது கணவரின் தாயார், என்னிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டாலும், பணம் தராவிட்டாலும் கொலை செய்துவிடுவதாகவும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...