உடுமலையில் அனுமதியின்றி புகையிலை விற்பனை: ஒருவர் கைது, 205 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

உடுமலையில் அனுமதியின்றி புகையிலை விற்பனை செய்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 205 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிக்கந்தர் பாஷா வீதியில் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையிலான போலீஸ் குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, உடுமலையைச் சேர்ந்த மனோஜ் குமார் (26), மைதீன் பாஷா (33) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா புது ஆயக்குடியைச் சேர்ந்த சதாம் உசேன் (33) ஆகியோர் சரக்கு வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து மனோஜ் குமார் என்பவரை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து 205 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அவற்றை கொண்டு வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மற்ற இரு நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த சட்டவிரோத புகையிலை விற்பனை தொடர்பான வலையமைப்பு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...