கோவை அரசு கலைக் கல்லூரியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறைகள் திறப்பு

கோவை அரசு கலைக் கல்லூரியில் கிரிஷா அறக்கட்டளையின் CSR நிதியுதவியுடன் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் நிறுவனமான எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்டின் கிரிஷா அறக்கட்டளை சார்பில், சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகள் ஜூலை 5 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். அவர் தனது உரையில், மாணவிகளின் நலனுக்காக இத்தகைய உதவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவரும், கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவ மாணவியர் கல்வி கற்று எதிர்காலத்தில் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பல மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய கழிப்பறை வசதிகள் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...