குடியிருப்பு பட்டா கோரி அனுப்பர்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், அனுப்பர்பாளையம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கோரி கோவை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குடியிருக்க பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் ஆகியோரைச் சந்தித்து தெரிவித்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு தெலுங்குபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சுமார், 3 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. தற்போது, பருவமழை பெய்யாததால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...