கோவை மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்பு

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் 9 நிமிடங்களில் முடிவடைந்தது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இக்கூட்டம் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, மேயர் எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இரு கட்சிகளின் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் மேயராக இருந்த செ.ம.வேலுசாமி ராஜினாமா செய்தபோது தாங்கள் கேள்வி எழுப்பவில்லை என துணை மேயர் வெற்றிச்செல்வன் சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து, மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டம் வெறும் 9 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

இந்நிகழ்வில் துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, க.சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), வே.கதிர்வேல் (வடக்கு), ர.தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நிலைக்குழுத் தலைவர்களான தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), சாந்தி முருகன் (பணிகள்), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்) உட்பட நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...