கோவை மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்பு

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் 9 நிமிடங்களில் முடிவடைந்தது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இக்கூட்டம் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, மேயர் எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இரு கட்சிகளின் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் மேயராக இருந்த செ.ம.வேலுசாமி ராஜினாமா செய்தபோது தாங்கள் கேள்வி எழுப்பவில்லை என துணை மேயர் வெற்றிச்செல்வன் சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து, மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டம் வெறும் 9 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

இந்நிகழ்வில் துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, க.சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), வே.கதிர்வேல் (வடக்கு), ர.தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நிலைக்குழுத் தலைவர்களான தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), சாந்தி முருகன் (பணிகள்), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்) உட்பட நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...