கோவை வேளாண் பல்கலையில் வருடாந்திர காரிஃப் எண்ணெய் வித்துக்குழு கூட்டம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருடாந்திர காரிஃப் எண்ணெய் வித்துக்குழு கூட்டம் நடைபெற்றது. எண்ணெய் வித்து பயிர்களின் முக்கியத்துவம், ஆராய்ச்சி முடிவுகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் வருடாந்திர காரிஃப் எண்ணெய்வித்துக்குழு கூட்டத்தின் துவக்க விழா இன்று (09.07.2024) நடைபெற்றது. தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

முனைவர் எம். இரவீந்திரன், ஆராய்ச்சி இயக்குநர், வரவேற்புரை ஆற்றி விழாவினை தொடக்கி வைத்தார். உலகளவில் மற்றும் இந்திய அளவில், எண்ணெய் பயிர்களின் மகசூல் மற்றும் உற்பத்திதிறன் குறித்து அவர் உரையாற்றினார்.



Dr. சஞ்சீவ் குப்தா, ADG(O&P), எண்ணெய் வித்து பயிர்களான எள், சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் நைஜர் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விளக்கினார். பண்பு சார்ந்த மரபணு வகைகளை பல்வேறு சூழலில் மதிப்பீடு செய்து தேர்வு செய்தல் மிகவும் இன்றியமையாதது எனவும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் R.K. மதூர், இயக்குநர் ICAR, IIOR ஹைதராபாத், ஆமணக்கு மற்றும் சூரியகாந்தியில் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து முனைவர் ஆனந்த் விஸ்வகர்மா, எள் மற்றும் நைஜர் எண்ணெய் வித்துகளின் கடந்த ஆண்டு ஆராய்ச்சி முடிவுகளை விளக்கினார்.



முனைவர் T.R. சர்மா (DDG CCS), ICAR, புது டெல்லி, எண்ணெய் வித்து பயிர்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களின் சாதனைகளை பாராட்டினார். நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய இரகங்களை உருவாக்க மரபணு மூலக்கூறு காரணிகளை பயன்படுத்த அவர் வலியுறுத்தினார்.

துணைவேந்தர் முனைவர் வி. கீதாலட்சுமி, எண்ணெய் வித்து பயிர்களின் முக்கியத்துவம், இரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். மாறிவரும் காலநிலைக்கேற்ற வகையில் அதிக விளைச்சல் தரும் குறுகிய கால மண்டலத்திற்கு ஏற்ற இயந்திர அறுவடை செய்யும் இரகங்களை உருவாக்குதல் மூலம் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தித்திறனை உயர்த்த இயலும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது எள் பயிர் சாகுபடி, எண்ணெய் வித்து தொழில்நுட்பங்கள் மற்றும் எள், சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் நைஜர் பற்றிய வருடாந்திர அறிக்கை உள்ளிட்ட புதிய வெளியீடுகள் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

இக்குழு கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆமணக்கு, சூரியகாந்தி, எள் மற்றும் நைஜர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 150க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...