தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது கட்டாயமாக உள்ள நிலையில், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் பணிப்பவர்களுக்கு அபாரதம் விதித்து வருகிறது காவல் துறை. இந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் நுழையவும் தலை கவசம் அவசியம் என்று அறிவிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-
கோவை மாநகரில் சாலை விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் 'கட்டாய தலை கவசம் அணியும் வளாகம்' என்று அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனால் சாலை விபத்துகள் வெகுவாக குறையும்.
தற்போது, கோவையில் சில பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தை சரியாக கடைபிடித்து வருகின்றனர். இத்திட்டத்தை, கோவையில் உள்ள மற்ற கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சாலை விபத்துக்களை தவிற்க , விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தனிக்கை நடைபெற உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் சாலை விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் 'கட்டாய தலை கவசம் அணியும் வளாகம்' என்று அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனால் சாலை விபத்துகள் வெகுவாக குறையும்.
தற்போது, கோவையில் சில பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தை சரியாக கடைபிடித்து வருகின்றனர். இத்திட்டத்தை, கோவையில் உள்ள மற்ற கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சாலை விபத்துக்களை தவிற்க , விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தனிக்கை நடைபெற உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.