உடுமலையில் மதுரை வீரன் கோவில் திருவிழா: திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

உடுமலையில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருக்கல்யாணம், அபிஷேகம், முளைப்பாறி எடுத்தல் போன்ற நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு யு எஸ் எஸ் காலனி பகுதியில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நேற்று (9-7-24) ஆனி மாதம் 25 ம் தேதி துவங்கியது.

இன்று முக்கிய நிகழ்வான ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக மாரியம்மன் கோவில் சுந்தர் அர்ச்சகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சார்பில் திருமாங்கல்யம், மாலைகள், புத்தாடைகள் உள்ளிட்ட 25 வகையான சீர்வரிசைகள் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.



மேலும் பால், பன்னீர், புஷ்பம், மஞ்சள் உள்ளிட்ட 14 வகை அபிஷேகங்கள் மதுரை வீரன் சாமிக்கு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மதுரை வீரன் சாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்த நிலையில் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

முன்னதாக இன்று காலையில் முளைப்பாறி எடுக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்று தன்னாட்சி யப்பன் கோவில் பகுதியில் இருந்து கோவில் வரை வந்தனர்.

இதற்கிடையில் நேற்று முதல் நாளில் திருச்செந்தூர், பவானி, கூடுதுறை, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் ஊர்வலமாக சென்று மதுரைவீரன் கோவிலை அடைந்தது. மேற்கண்ட நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...