கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 19ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். இம்முகாமில் பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்படும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும், அதன்படி வரும் 19ம் தேதி காலை 10:00 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்களும் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பு இல்லை என்பதோடு, அனுமதியும் இலவசமாகும்.

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும், பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு 0422 - 2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...