கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வந்தார். இன்று காலை முதல் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷ், மதியம் தனது விடுதி அறைக்குச் சென்றார்.
பின்னர், அவரது அறையில் இருந்து எந்த சத்தமும் கேட்காததால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது சுபாஷ் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வந்தார். இன்று காலை முதல் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷ், மதியம் தனது விடுதி அறைக்குச் சென்றார்.
பின்னர், அவரது அறையில் இருந்து எந்த சத்தமும் கேட்காததால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது சுபாஷ் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.