காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பவ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளி உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல நாட்களாக போராடும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டியவர்கள் விவசாயிகளின் கோரிக்யை உடனடியாக மத்திய அரசுச் நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால, பரபரப்பாக காணப்படும் உழவர் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளி உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல நாட்களாக போராடும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டியவர்கள் விவசாயிகளின் கோரிக்யை உடனடியாக மத்திய அரசுச் நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால, பரபரப்பாக காணப்படும் உழவர் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.