கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர், எம்.பி., மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், 32வது வார்டில் உள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 கூடுதல் வகுப்பறைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர் ச.செல்வசுரபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ரா.பார்த்திபன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் பல மாநகராட்சி அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர் ச.செல்வசுரபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ரா.பார்த்திபன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் பல மாநகராட்சி அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.