நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தபெதிக, எஸ்எப்ஐ அமைப்பினர்


மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வையே மீண்டும் நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கடுமையாக கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.

மேலும், காவல்துறையினரின் தடையை மீறி கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...