கோவையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்பு

கோவை 63வது வார்டில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகரின் 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவின் "இல்லந்தோறும் இளைஞரணி" உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டார்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 63இல் உள்ள பெருமாள் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், துணை அமைப்பாளர் லாராபிரேம்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் பகுதி செயலாளர் ப.பசுபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 63வது வட்டக் கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மேலும், பொதுக்குழு உறுப்பினர் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், கோவை மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் திமுக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. திமுக கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம் கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கையின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. இது கட்சியின் அடித்தள பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...