தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) அனல் காற்று வீசும் வாய்ப்புகள் இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கூடலூர், விழுப்புரம், நாகபட்டினம், புதுகோட்டை, வெல்லூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் தீவிர அனல் காற்று வீசும். ஆகையால் மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அனல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் வரலாறு காணதளவு தற்போதே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மேலும் அனல் காற்று வீசக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவிவருகிறது.