தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. 2024-25 கல்வியாண்டுக்கு 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூலை 12) முதல் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு ஜூலை 14 மாலை 5 மணி வரை தொடரும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெறப்படும். சேர்க்கை பெற்ற மாணவர்கள் மட்டும் சேர்க்கையை உறுதி செய்யும்போது இணையதளம் மூலம் ரூ.5,000 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்ளே நுழைந்து தங்களின் கல்லூரி, பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பமே இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும்.

கலந்தாய்விற்கான வழிமுறைகளை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...