குறிச்சி பகுதியில் தொடரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகோரி மாநகராட்சி அணையரிடம் மனு

கோவை மாவட்டம், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 முதல் 100 வரையிலான வார்டுகளை உள்ளடக்கிய குறிச்சி பகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாணக் கோரி திமுக குறிச்சி பகுதி செயலாளர் நா.பிரபாகரன் தலைமையிலான திமுக-வினர் மாநகராட்சி அணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குறிச்சி நகராட்சியானது கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், ஆழியார் மற்றும் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டங்கள் இருந்தும் தற்போது குறிச்சி பகுதியில் 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை 25 நாட்களுக்கும் மேலாக சேமித்து உபயோகப்படுத்துவதால் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சியின் மற்ற வார்டுகளில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சியின் மற்றப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதைப் போலவே குறிச்சி பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய வேண்டும். 

மேலும், 3 நாட்களுக்கு ஒருமுறை வழக்கப்பட்டு வந்த கிணற்றுநீரும் தற்போது காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அத்யாவசியத் தேவைக்கும் கூட நீரின்றி சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே, லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரையும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியல் ஆதாயம் கருதி தங்களுக்கு வேண்டிய பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்கின்றனர்.

அதேப்போல குறிச்சி பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசமடைந்து உள்ளது. போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் துப்புரவு பணி மற்றும் வடிகால் சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் மந்தமாகவும், சரியான முறையிலும் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாகவும், தொற்றுநோய்கள் பரவுகின்றன. எனவே, சுகாதார பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேணடும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோவை பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகப்படியாக ஏற்பட்டு வருகிறது. உடனடியாக மேம்பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும், குறிச்சி பகுதியிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாமல் பயனற்று உள்ளது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிச்சி பகுதி திமுக செயலாளர் பிரபாகரன், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...