'சட்டம் ஒழுங்கு திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை' - வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை பாராட்டியதோடு, திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அண்மைய கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசியதை மேற்கோள் காட்டி, வானதி சீனிவாசன் கூறியதாவது: "மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த மூன்று ஆண்டுகளும் இப்படித்தான் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்."

மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய ரயில்கள் உள்கட்டமைப்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

மேலும், "கோவை விமான நிலைய விரிவாக்கம், சென்னை புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை," என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தும் வானதி சீனிவாசன் விளக்கமளித்தார். "மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரிவிதிக்கும் அதிகாரமும் மத்திய அரசிடம் இல்லாமல் மத்திய அரசுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.

தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார். "திமுக அரசின் லட்சணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலேயே தெரிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு என்பது திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் வீட்டில் முன்பு வெட்டி கொல்லப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது," என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...