கோவையில் 15 அடி உயர டவரில் யோகாசனம் செய்து 12 வயது சிறுவன் உலக சாதனை

கோவையில் 15 அடி உயர டவரில் ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் நின்று 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன் யூனியன் உலக சாதனை படைத்தார். சுட்டெரிக்கும் வெயிலில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன், 15 அடி உயரமான டவரில் நின்று கொண்டு ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் தொடர்ந்து நின்று யூனியன் உலக சாதனை படைத்தார்.

சரண்யா மற்றும் பாலசுந்தரம் தம்பதியரின் மகனான சர்வஜித், ஏழாம் வகுப்பு மாணவராக இருக்கிறார். சிறு வயதிலேயே யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனைகள் உட்பட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.



இந்த புதிய உலக சாதனை நிகழ்வு, சர்வஜித் பயிலும் வேலம்மாள் போதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவரின் மேல் ஏறிய சர்வஜித், அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து நிலைநிறுத்தினார்.

ரஷ்யாவிலிருந்து வந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட், சர்வஜித்தின் சாதனையை நேரடியாக கண்காணித்தார். சாதனையை அங்கீகரித்த அவர், யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



சுட்டெரிக்கும் வெயிலில், 15 அடி உயரத்தில் கைகளை மட்டுமே சமநிலைப்படுத்தி ஆங்கிள் போஸில் யோகா செய்த சர்வஜித்தின் இந்த உலக சாதனையை, அவரது பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...