கோவை வ.உ.சி பூங்கா அருகே உணவு வீதி திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கோவை வ.உ.சி பூங்கா அருகே ரூ.1 கோடி மதிப்பில் உணவு வீதி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் தாமதமடைந்துள்ளதால், அவற்றை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி பூங்கா அருகே உணவு வீதி திட்டம் மூலம் தரமான, சுவையான உணவுகளை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் ஒரு சுத்தமான சாலையோர பகுதியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு ரூ.1 கோடி நிதியை ஒதுக்கி பணிகளை நடத்த அறிவுறுத்தியது.

தமிழகத்தில் முதல் கட்டமாக கோவையுடன், சென்னையில் உள்ள எலியட் பீச் பகுதி, வேளாங்கண்ணி சாலையோர உணவு தெரு பகுதி, மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள கோவில் வீதி ஆகிய இடங்களிலும் தலா ரூ.1 கோடியில் இந்த உணவு வீதி திட்டத்தை முன்னெடுக்க மொத்தம் ரூ. 4 கோடியை மத்திய அரசு சென்ற ஆண்டு ஒதுக்கியது.

இந்த வீதிகளில் ஒரே மாதிரியான கடைகள் கட்டப்படும். அத்துடன் நடைபாதை, தெரு விளக்கு, வாடிக்கையாளர்கள் கடை அருகே உட்கார்ந்து உணவு சாப்பிட இடம், கழிப்பிட வசதி, திடக்கழிவு சேகரிப்பு தொட்டி என நிறைய வசதிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

கோவையில் இந்த பணியை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் அக்டோபர் 2023 துவங்கியது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் தலா 330 சதுர அடியில் வ.உ.சி பூங்கா எதிரே, மைதானத்துக்கு அருகே ஒரு நேர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கடைகள் ஏலம் அடிப்படையில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும். இதற்கு முன்பு இந்த பகுதியில் கடைகள் நடத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, மேற்கூரைகள் அமைக்கப்பட்டு, வண்ணமும் பூசி முடிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் மாதத்திலேயே சுமார் 80% பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதம் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, தெரு விளக்கு வசதி, கழிப்பிட வசதி போன்றவை அமைக்கப்பட வேண்டி உள்ளது.

மார்ச் மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த இந்த திட்டப்பணிகள், மே, ஜூன் என சென்று கொண்டே இருந்தது. இப்போது ஜூலை ஆகியும் இந்த உணவு வீதி பணிகள் முடியாமல் உள்ளது.

கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் பிற பணிகள் மீதம் இருப்பதால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் சேர ஆரம்பித்துள்ளது. இலைகள் மற்றும் பிற குப்பைகள் கொத்து கொத்தாக அங்கு பரவி உள்ளது.

இங்கு மாநகராட்சி கவனம் செலுத்தி, துப்புரவு பணிகளை மேற்கொள்வதோடு விரைவில் மீதம் உள்ள பணிகளை முடித்து உணவு வீதி மூலம் சுத்தமான உணவை எளிய மக்களும் தரமான வகையில் அனுபவிக்க வழி செய்ய வேண்டும் என மக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...