பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வனத்துறை அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அருவியில் குளிப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் ஆழியார் கவியருவிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.



இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 7:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்து குவிந்தனர். வனத்துறை அதிகாரிகளும் வழக்கம் போல சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதித்தனர்.



எனினும், சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, காலை 9 மணி அளவில் திடீரென கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியிலிருந்து அதிக அளவில் நீர் கொட்டத் தொடங்கியதை அடுத்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை அவசரமாக வெளியேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆழியார் கவியருவியை தற்காலிகமாக மூடியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...