கோவை பேருந்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் இந்த திருட்டை நடத்தியுள்ளார்.


கோவை: கோவை அடுத்த மதுக்கரை மலைசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சைலஜா (38) என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி பேருந்தில் திருடப்பட்டுள்ளது.

நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு மின்சார பொருட்கள் கடையில் பணிபுரியும் சைலஜா, ஜூலை 13 அன்று வேலை முடிந்து பேருந்தில் குனியமுத்தூர் செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் சைலஜாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சைலஜா, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...