கோவை விமான நிலையத்தில் பயணியிடம் பணம் திருடிய பாதுகாப்பு ஊழியர் கைது

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த 660 ரூபாயை திருடிய பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டார். சம்பவம் ஜூலை 13 அன்று நடந்தது.


கோவை: கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பணம் திருடிய பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இந்தப் பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 13 அன்று விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாப்பு ஊழியர் சிவக்குமார் (58) என்பவர் ஒரு பயணியின் பையை வாங்கி ஸ்கேனிங் எந்திரத்திற்குள் அனுப்பி சோதனை செய்தார். அந்த நேரத்தில், அவர் பையில் இருந்த 660 ரூபாயை திருடினார்.

இதனைக் கவனித்த பயணி உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் அஜய்குமார் (39), பீளமேடு காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சூலூர் செங்கத்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு அமைப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ளவரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குரியது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...