அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்றது

கோவை கேரள கிளப்பில் தோல் தான விழிப்புணர்வு கருத்தரங்கம், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், ஆயுள் காப்பீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவை கேரள கிளப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தோல் தான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம், அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கௌரவித்தல், மற்றும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.



இந்நிகழ்விற்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிறுவனர் & தலைவர் ஆர்.கே.குமார் தலைமை உரையாற்றினார். பொதுச்செயலாளர் Dr.V.H.சுப்ரமணியம், கௌரவ தலைவர் சுந்தர வடிவேலு, மாநில தலைவி லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



சிறப்பு விருந்தினர்களாக கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் மற்றும் உலக மலையாளி கவுன்சில் தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் தோல் தான விழிப்புணர்வு குறித்த விரிவான விளக்கங்களையும் அதன் அவசியத்தையும் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி ஆளுநரும், மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு பேசுகையில், "அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தோல் தான விழிப்புணர்வு குறித்த நிகழ்வில் இவர்களுடன் ரோட்டரி கிளப்பும் இணைந்து கைகோர்த்து மக்களுக்கு தோல் தான விழிப்புணர்வை எடுத்துரைக்கும் என்பதில் உறுதி அளிக்கிறேன்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...