கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 62-வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர், தனபால் லே-அவுட் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மாநகராட்சி பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியினையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தனபால் லே ஆவுட் பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வரும் பிரதான குடிநீர் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், உடனடியாக அதனை சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின், என்.ஜி.ராமசாமி லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனைத் தொர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியினையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தனபால் லே ஆவுட் பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வரும் பிரதான குடிநீர் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், உடனடியாக அதனை சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின், என்.ஜி.ராமசாமி லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.