கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும், 1 வார்டு வீதம் தற்பொழுதுள்ள நிலையில், அனைத்து கட்டிடங்களையும் விடுதலின்றி ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் தற்போதுள்ள கட்டிடத்தின் உபயோகம் மற்றும் கூடுதலாக கட்டப்பெற்ற கட்டிடப்பகுதிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து, உரிய வரி விதிப்பு செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தற்போது கிழக்கு மண்டலத்தில் வார்டு எண். 69, மேற்கு மண்டலத்தில் வார்டு எண். 24, தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79, வடக்கு மண்டலத்தில் வார்டு எண். 38 மற்றும் மத்திய மண்டலத்தில் வார்டு எண். 54 பகுதிகளில் உள்ள சுமார் 18769 வரிவிதிப்புகளில், மேற்படி பணிகள் மாநகராட்சி பணியாளர்களின் மூலம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
எனவே, பொதுமக்கள் இப்பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போதுள்ள கட்டிடத்தின் உபயோகம் மற்றும் கூடுதலாக கட்டப்பெற்ற கட்டிடப்பகுதிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து, உரிய வரி விதிப்பு செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தற்போது கிழக்கு மண்டலத்தில் வார்டு எண். 69, மேற்கு மண்டலத்தில் வார்டு எண். 24, தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79, வடக்கு மண்டலத்தில் வார்டு எண். 38 மற்றும் மத்திய மண்டலத்தில் வார்டு எண். 54 பகுதிகளில் உள்ள சுமார் 18769 வரிவிதிப்புகளில், மேற்படி பணிகள் மாநகராட்சி பணியாளர்களின் மூலம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
எனவே, பொதுமக்கள் இப்பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.