கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஜூலை 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை (ஜூலை 16) அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை அறிவிப்பு வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை அறிவிப்பு வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.