சிறு, நடுத்தர வணிகங்களை வலுப்படுத்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம்

கோயமுத்தூரில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் இன்டியா, கிளவுட்(cloud) அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை வழங்க உள்ளது. இந்திய தரவு மையங்களில் உதவியுடன் மைக்ரோசாப்ட் அசுர், ஆபிஸ் 365, சிஆர்எம் ஆன்லைன் மற்றும் பேரிடர் மீள் சேவை போன்றவைகளை பயன்படுத்தி மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம் இயங்குவதை பற்றி கோவை நகரில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களான பயோலைன் ஆய்வகம், மான்ட்ப்ளூ தொழிநுட்பம் விளக்கியுள்ளன.



இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் மையத்தை 50%க்கும் மேலாக பயன்படுத்தும் 8 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. பயோலைன் பரிசோதனை மையமானது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மையங்கள் இணைந்து செயல்படுகின்றன. இதுபோன்றே மான்ட்ப்ளூ தொழிநுட்பம் நிறுவனம் ஆபீஸ் 365 பயன்படுத்தி வணிகத்தை ஒருங்கிணைந்து, வணிகத்தை மேம்படுத்தியுள்ளது. இத்தகைய வசதியால், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு 25% விற்பனையை அதிகரிக்கும்.

இது பற்றி மைக்ரோசாப்ட் இன்டியா எஸ்எம்பி வணிக தலைவர் மணிஷ் ஷர்மா கூறுகையில்; எங்களது கிளவுட் தொழில்நுட்பத்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சர்வதேச வாய்ப்புகளை பெற்றுள்ளன. இந்த வணிகத்தை சக்தியுள்ளதாக மாற்றும் வகையில் சரியான தீர்வுகளை புதுமையாகவும், வளர்ச்சிக்கு உகந்தவையாகவும் மைக்ரோசாப்ட் அளிக்க கடமைப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் வணிக அமைப்பானது, வணிக மாதிரிகளை உருவாக்குவதோடு மற்றும் தேவையான மாற்றங்களை குறைவான விலையில் அமைத்து தருகிறது. 

வாடிக்கையாளர்கள், வணிகத்தின் அளவை உயர்த்துவதோடு அதன் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது. இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்கள் அதிக அளவில்  உள்ள நகரமாக கோயமுத்தூர் திகழ்கிறது. கிளவுட் தொழில்நுட்பத்தால் நோயாளிகளை நன்கு கவனிப்பதில் பயோலைன் ஆய்வகம் சிறப்பாக செயல்படுகிறது. மான்ட்ப்ளு தொழில்நுட்பம், வேலைத்திறனை முழுமையாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...