காங்கேயம் அருகே கார் விபத்து: அமைச்சர் உறவினர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் கார் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து. அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் ஜெகன் பிரகதீஷ் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம் அருகே முத்தூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜெகன் பிரகதீஷ் (23), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார். நள்ளிரவில் முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஓட்டிச் சென்ற ஜெகன் பிரகதீஷ், பாப்பினி அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.



விபத்தில் படுகாயமடைந்த ஜெகன் பிரகதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த ஜெகன் பிரகதீஷ், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் அண்ணன் மகன் என்பதும், அவரது குடும்பத்தின் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...