கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி, ஆட்சியர் ஆய்வு

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி கணபதி ராஜ்குமார், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகர் கணபதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நெடுநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜூலை 16 அன்று மதியம் அப்பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் Kranthi Kumar Pati, "சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக என்ன செய்ய முடியும், கால அவகாசம் எடுத்து என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்," என்றார்.



ஆட்சியர் மேலும் கூறுகையில், "இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைக்கும் என்ற கருத்து ஆய்வின் பின் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த பணிகள் விரைவில் துவங்கும்," என்றார்.

சக்தி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கணபதி வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்ற 2020 அக்டோபர் மாத கோவை மாநகராட்சி தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிகிறது. இங்கு 3 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



"மேலும் 73,000 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 1-2 மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...