திருப்பூரில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 18ஆம் தேதி தொடக்கம்

திருப்பூரில் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' வரும் 18ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. 300 அரங்குகளில் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்.


Coimbatore: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், வரும் 18ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் மகாலில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் 300 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது 19வது ஆண்டாக நடத்தப்படும் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியாகும்.



கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "சுமார் 350 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதற்கேற்ப கட்டட பொறியாளர்கள், வீடு கட்டுவோர் மற்றும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த 'அப்டேட்' ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றனர்.

வீடுகளின் முகப்பு கதவு முதல் சமையலறை வரை தேவைப்படும் கட்டுமான பொருட்களின் தற்போதைய புதிய வரவுகள் கண்காட்சியில் இடம்பெறும். மழை நீரை சேகரித்து குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...