பொள்ளாச்சி அருகே நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி சீரழிவு: மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து, பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலத்தில் பள்ளிக்குள் நீர் தேங்குவதால் மாணவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி மோசமான நிலையில் உள்ளது. இந்த பழமையான பள்ளியில் தற்போது 29 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்கள் பலவீனமாகவும் காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, உடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் பள்ளிக்குள் ஊடுருவி தேங்கி நிற்கிறது. மேலும், பலவீனமான சுவர்களில் மழைநீர் ஊடுருவுவதால் மின்கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.



இந்த அவலநிலையை சரிசெய்ய கோரி பெற்றோர்கள் பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி இருப்பதால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பள்ளியை விரைவாக சீரமைத்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...