பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்த அமைச்சர், உயர்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் வழியாக சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், திடீரென கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் தனித்திறமைகளை நேரடியாக கேட்டறிந்தார். மேலும், ஆசிரியர்களிடம் மாணவிகளின் கல்வித்திறன் பற்றி விசாரித்தார். ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவிகளிடம் அன்று நடைபெற்ற பாடத்தின் கேள்வி வினாக்களையும் கேட்டு அறிந்தார்.

மாணவிகளுடன் உரையாடிய அமைச்சர், "கிராமத்தில் படிக்கும் நீங்கள் கண்டிப்பாக இடைநிலை கல்வியை தவிர்க்க வேண்டும். உயர்கல்வியை கட்டாயம் தொடர வேண்டும்" என்று வலியுறுத்தினார். இவ்வாறு மாணவிகளுக்கு ஊக்கமளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடைபெற்றார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...