கோவை அரசினர் மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

கோவை அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் உள்ள அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உயர் கல்வித்துறை சார்பில் 15 வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஜூலை 16 அன்று திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராஜேந்திரன், எக்ஸிகியூட்டிவ் திருநாவுக்கரசு, துணை முதல்வர் கண்ணகி, அனைத்து கல்லூரி துறை தலைவர்கள், PWDC பொறியாளர்கள், வித்யா ராமனாதன் MC, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...