கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் 87 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை


வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல சிட் பண்ட் நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் 87 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று அதற்கு வட்டி வழங்கி செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நிறுவனம் வருமானத்திற்கு உரிய முறையில் கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக அந்நிறுவனத்தின் 87 கிளைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் நூறு அடி சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கணபதியில் உள்ள அந்நிறுவன கிளை உள்ளிட்ட 7 இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பிரபல சிட்பண்ட் நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனை அதன் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...