கோவையில் துவரம் பருப்பு விலை ரூ.195-ஆக உயர்ந்துள்ளது. குருமிளகு, சுண்டல், முந்திரி, ஏலக்காய், பட்டாணி போன்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மழை குறைவால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Coimbatore: கோவையில் துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிக்கும். பின்னர் ஜனவரி மாதத்தில் விலை குறைந்து, ஏப்ரல்-மே மாதங்களில் நிலையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் துவரம் பருப்பின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.140 ஆக இருந்தது. கடந்த மாதம் இது ரூ.160 ஆக உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.195-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், மற்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது:
- குருமிளகு: ரூ.600-லிருந்து ரூ.780-க்கு உயர்வு
- சுண்டல்: ரூ.70-லிருந்து ரூ.110-க்கு உயர்வு
- முந்திரி: ரூ.550-லிருந்து ரூ.850-க்கு உயர்வு
- ஏலக்காய்: ரூ.1,800-லிருந்து ரூ.3,000-க்கு உயர்வு
- பட்டாணி: ரூ.80-லிருந்து ரூ.130-க்கு உயர்வு
கோவையின் தானிய மார்க்கெட் சந்தைகளில் பெரும்பாலான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒரு வியாபாரி கூறுகையில், "மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மழைப் பொழிவு குறைவால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது," என்றார்.
மேலும் அவர், "முந்திரி, ஏலக்காய், பூண்டு, பட்டாணி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தானியங்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை," எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிக்கும். பின்னர் ஜனவரி மாதத்தில் விலை குறைந்து, ஏப்ரல்-மே மாதங்களில் நிலையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் துவரம் பருப்பின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.140 ஆக இருந்தது. கடந்த மாதம் இது ரூ.160 ஆக உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.195-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், மற்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது:
- குருமிளகு: ரூ.600-லிருந்து ரூ.780-க்கு உயர்வு
- சுண்டல்: ரூ.70-லிருந்து ரூ.110-க்கு உயர்வு
- முந்திரி: ரூ.550-லிருந்து ரூ.850-க்கு உயர்வு
- ஏலக்காய்: ரூ.1,800-லிருந்து ரூ.3,000-க்கு உயர்வு
- பட்டாணி: ரூ.80-லிருந்து ரூ.130-க்கு உயர்வு
கோவையின் தானிய மார்க்கெட் சந்தைகளில் பெரும்பாலான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒரு வியாபாரி கூறுகையில், "மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மழைப் பொழிவு குறைவால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது," என்றார்.
மேலும் அவர், "முந்திரி, ஏலக்காய், பூண்டு, பட்டாணி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தானியங்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை," எனத் தெரிவித்தார்.