உடுமலை அருகே பால் வண்டி தீப்பிடித்து எரிந்து நாசம் - ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில், பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும், பால் வண்டி முற்றிலும் எரிந்து நாசமாகியது.

முதற்கட்ட விசாரணையில், பால் வண்டியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.



நல்ல வேளையாக, தீ விபத்து ஏற்படுவதற்கு முன் வாகனத்திலிருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் இருவரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...