கோவை மாநகராட்சியின் முதல் வார்டில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள்

கோவை மாநகராட்சியின் முதல் வார்டில், குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நேற்று (ஜூலை 16) நடைபெற்றன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 16) பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விஸ்வநாதபுரம், வி.பி.வி நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப் பயன்படும் பிரதான குடிநீர் குழாயின் கேட்வால்வில் ஏற்பட்டிருந்த பழுது சரி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் மீண்டும் துவக்கப்பட்டது.



ஜோதி நகர் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஜல்லிக்காடு, மாரியம்மன் கோவில் மேற்கு வீதி, ருக்கம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டன. அதோடு, இப்பகுதிகளில் காணப்பட்ட முட்புதர்களும் அகற்றப்பட்டன.



வார்டு முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணிகள் மூலம் வார்டில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...