கோவையில் செயல்பட்டுவரும் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை உள்ளது.
அறுவை சிகிச்சையின்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறை குறித்த பயிலரங்கம் வரும் 21-ம் தேதி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, நுரையீரல் துறை மருத்துவர் பரணிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நுரையீரல் தொடர்பான நவீன சிகிச்சை முறைகள் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கும் வகையில் 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் 50 சதவிகிதம் குறைந்த செலவில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது' என்றார்.