மேட்டுப்பாளையம் பகுதி பேருந்துகளில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஜூலை 17 அன்று காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் ஆகியவற்றில் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக்குப் பின்னர், அதிகாரிகள் பயணிகளிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினர். பேருந்து ஓட்டுனர்கள் அதிவேகமாக ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல், நடத்துனர் பயணிகளை படியில் தொங்கும்படி அனுமதித்தல், ஏர் ஹாரன் அல்லது மியூசிக்கல் ஹாரன் பயன்படுத்துதல், போநட் (Bonnet) அதாவது என்ஜின் மேற்பகுதியில் யாரையாவது அமரவைத்து செல்லுதல் போன்ற விதிமீறல்களை கண்டால், பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து RTO அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு புகார் அளித்தால் ஒரு மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...