பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம்: கோவை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கான பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு. பல்வேறு பயிர்களுக்கான காப்பீட்டு விவரங்கள், கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764, உளுந்து மற்றும் பச்சைப் பயறு பயிர்களுக்கு ரூ.308 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கான காப்பீட்டின் கடைசி தேதி 31.07.2024 ஆகும். மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.744, சோளத்திற்கு ரூ.245, கொள்ளுக்கு ரூ.308 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 16.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களான கத்தரிக்காய்க்கு ஏக்கருக்கு ரூ.1170, வெங்காயத்திற்கு ரூ.1782, தக்காளிக்கு ரூ.1495 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 31.08.2024 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ.2939, மரவள்ளிக்கு ரூ.1720, மஞ்சளுக்கு ரூ.722 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 16.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிர்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்திற்கான ஆவணங்களான சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகி காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து பாதுகாப்பு பெற இந்த திட்டம் உதவும் என்றும், மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...