சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு: சிகிச்சை பலனின்றி மற்றொருவர் பலி

கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி மற்றொருவர் உயிரிழந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த அழகர்ராஜா (24), முத்துக்குமார் (23), கருப்புசாமி (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நான்கு பேரில், தினேஷ்குமார் (23), மனோஜ் (24), பாண்டீஸ்வரன் (27) மற்றும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வீரமணி (21) ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரமணி ஜூலை 16 அன்று உயிரிழந்தார். இதன் மூலம் சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சோகமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...