மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் பாதிப்பு: முதல்வரிடம் தொழிலதிபர்கள் கோரிக்கை

தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிலதிபர்கள் எச்சரிக்கின்றனர்.


Coimbatore: தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர்கள் கூறியுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2022ஆம் ஆண்டில் தமிழக மின்சார வாரியம் நிலைக் கட்டணத்தை 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக (430 சதவீதம்) உயர்த்தியது. மேலும் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தையும் 20 சதவீதம் உயர்த்தியது. இந்த உயர்வால் பாதிக்கப்பட்ட 420 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மின்கட்டணத்தை குறைக்கக் கோரி 8 கட்ட இயக்கங்களை நடத்தியதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


தமிழக முதல்வர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தற்போது மின்சார வாரியம் மீண்டும் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளதாக தொழிலதிபர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் 97 சதவீத குறு, சிறு தொழில்கள் ஜாப் ஆர்டர்களாகவும், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களாகவும் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 8 சதவீதம் கூட லாபம் இல்லாமலும், நிலையான ஆர்டர்கள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்துவது தொழில்துறையினர் மீது பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.


இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், உள்ளூரிலும் வேலைவாய்ப்பு வழங்கி வரும் குறு, சிறு தொழில்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் தொழிலதிபர்கள் எச்சரித்தனர்.


எனவே, தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்க உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தையும் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...