கோவையில் அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84வது வார்டில், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக வந்த அரசு அதிகாரிகளை, குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் உள்ள ஜிஎம் நகர், கோட்டை புத்தூர் ஜமீன்தார் நகர், வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்எஸ் கார்டன், ரோஜா கார்டன், காந்திநகர், ஜன்னத்துல் பிர்தௌஸ் கார்டன், கேஎஸ் பார்க் போன்ற பகுதிகளில் சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.



இந்நிலையில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இன்று நேரில் வந்தனர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அவர்களை கையோடு அழைத்துச் சென்று சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் 88வது வார்டு எஸ்டிபிஐ கவுன்சிலர் வீட்டின் முன்பாக பொதுமக்கள் கூடவே, அங்கு கவுன்சிலரின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிப்படை வசதிகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...