கின்னஸ் சாதனை முயற்சியாக காகித கோப்பைகள் மூலம் கலாம் உருவ படத்தை வடிவமைத்த கேம்போர்டு பள்ளி மாணவர்கள்



கின்னஸ் சாதனை முயற்சியாக கோவை மணிகாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் இணைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவ படத்தை 2 லட்சத்தி 35 ஆயிரம் காகித கோப்பைகளை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.



கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியில் கேம்போர்டு இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.



அதன் படி, இன்று காலை பள்ளி மைதானத்தில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் 167 மாணவ மாணவியர் ஒன்றிணைந்து காகித கோப்பைகளை பயன்படுத்தி அப்துல்கலாம் அவர்களின் உருவ படத்தை வடிவமைத்தனர்.



10 ஆயிரத்து 560 சதுர அடியில், கருப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட 5 நிறங்களினால் ஆன சுமார் 2 லட்சத்தில் 35 ஆயிரம் காகித கோப்பைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலை 6.30 மணியவில் துவங்கிய பணி மாணவ, மாணவியர்களின் கூட்டு முயற்சியால் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் முடிவடைந்தது..



முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு 1 லட்சத்தில் 40 ஆயிரம் காகித கோப்பைகளை பயன்படுத்தி லக்னோவில் நடைபெற்ற சாதனையை முறியடிக்கும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்கள் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் வீடியோ பதிவுகளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான ஆதாரமாக அனுப்பப்பட உள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பாக  தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மாணவ, மாணவியரை வாழ்த்தி உரையாற்றினார். பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்வை பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டி மகிழ்வித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...