திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளி திருவிளக்கு பூஜை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழிபட்டனர். சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் முன்னதாக, ஆவுடைநாயகி அம்பாள் மற்றும் ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

பூஜையில் பங்கேற்றவர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மாங்கல்யம், தேங்காய், வாழைப்பழம், அரிசி கொண்டு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழித்திடவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், சுமங்கலி பெண்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் குத்துவிளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...