போத்தனூர் அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் கார் கொள்ளை

கோவை மாவட்டம், போத்தனூர் கருப்பராயப் கோவில் வீதியை சேர்ந்தவர் ஷா ஆலம் (43). இவர் கடந்த 16ம் தேதி தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு நேற்று கோவை திரும்பியுள்ளார். 

அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷா ஆலம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை, 30,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாண்ட்ரோ காரும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஷா ஆலம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவிடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...