கோவை மாவட்டம், போத்தனூர் கருப்பராயப் கோவில் வீதியை சேர்ந்தவர் ஷா ஆலம் (43). இவர் கடந்த 16ம் தேதி தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு நேற்று கோவை திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷா ஆலம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை, 30,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாண்ட்ரோ காரும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஷா ஆலம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவிடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷா ஆலம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை, 30,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாண்ட்ரோ காரும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஷா ஆலம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவிடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.